உலகின் பெரிய கோயில்கள்

மீனாட்சியம்மன் கோயில், மதுரை

• 2 தங்க விமானம், 14 கோபுரங்கள் இங்கு உள்ளன. ‌‌‍‍‌

• நடராஜர் வலதுகாலை ஊன்றி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு இடது காலை ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார்.

• நடராஜர் வலதுகாலை ஊன்றி இருப்பது வழக்கம். ஆனால் இங்கு இடது காலை ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார்.

• 64 திருவிளையாடல்களை சிவபெருமான் நிகழ்த்திய தலம்.

• இங்கு அம்மனை வணங்கிய பிறகே சிவனை வணங்க வேண்டும்.

• தமிழகத்திலுள்ள 366 மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களின் மூலக்கோயில்.

அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா

• கி.பி 1113 - 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.

• 162.6 எக்டேர் பரப்பு கொண்டது.

• கம்போடியா நாட்டின் சின்னமாக உள்ளது.

• பள்ளி கொண்ட நிலையில் விஷ்ணு இங்கு இருக்கிறார்.

நடராஜர் கோயில், சிதம்பரம்

• பூலோக கைலாயம் எனப்படும் இத்தலம் சிவன் கோயில்களில் முதன்மையானது.

• சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகரால் பாடல் பெற்றது.

• 40 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு சிவனின் ஐந்து சபைகள் உள்ளன.

• கனக சபையின் பொற்கூரை பராந்தக சோழனால் கட்டப்பட்டது.

• கிழக்கு கோபுரத்தில் 108 சிவதாண்டவங்கள் இடம் பெற்றுள்ளன.

ரங்கநாதர்கோயில், ஶ்ரீரங்கம்

• 108 திவ்ய தேசங்களில் முதல் தலம்.

• 156 ஏக்கர் பரப்பு கொண்டது.

• தென்னிந்தியாவின் பெரியராஜ கோபுரம் இங்குள்ளது ( 239 அடி ).

• ‍‍21 கோபுரங்களும், 7 மதில் சுவர்களும் உள்ளன.

பிரகதீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

• கி.பி. 11ம் நூற்றாண்டில் முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

• மூலவர் 54 அடி சுற்றளவுள்ள ஆவுடையுடன் 23 அடி உயர பாணத்துடன் இருக்கிறார்.

• 20 டன் எடையில் ஒரே கல்லால் ஆன நந்தி சிலை உள்ளது.

• தட்சிண மேரு என்னும் 216 அடி உயர விமானம் இங்குள்ளது.

அண்ணாமலையார் கோயில், திருவண்ணாமலை

• 24 ஏக்கர் பரப்பு, 6 பிரகாரம், 9 ராஜகோபுரம் கொண்ட கோயில்.

• கிழக்கு கோபுரம் 216 அடி உயரம் கொண்டது.

• 142 சன்னதி, 22 பிள்ளையார், 306 மண்டபங்கள் உள்ளன.

• திருக்கார்த்திகையன்று 2668 அடி உயரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

• 23 ஏக்கர் பரப்பும், 180 அடி உயர கிழக்கு கோபுரமும் கொண்டது.

• கல்யாண மண்டபத்தில் இருக்கும் கற்சங்கிலிகள், சிற்பக்கலைக்கு சான்று.

• குளத்தில் மூழ்கி இருக்கும் அத்திவரதரை 40 ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து வழிபடுவர்.

• இங்கு தங்கம், வெள்ளியாலான பல்லிக்கு சன்னதி உள்ளது.

ஏகாம்பரேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

• கி.பி. 1509ல் கட்டப்பட்டது. பஞ்சபூதங்களில் மண்ணுக்குரிய தலம் இது.

• 25 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு கோபுரம் 190 அடி உயரம் கொண்டது.

• முக்தி தலங்கள் ஏழில் இதுவே முதன்மையானது.

• சிவலிங்கம் மண்ணால் ஆனதால் அபிஷேகம் கிடையாது.

தியாகராஜசுவாமி கோயில், திருவாரூர்

• 30 ஏக்கர் பரப்பு கொண்ட இங்கு கிழக்கு கோபுரத்தின் உயரம் 98 அடி.

• ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இங்குள்ளது.இதை ஆழித்தேர் என்பர்.

• 9 ராஜகோபுரம், 80 விமானம், 12 மதில்கள், 13 மண்டபம், 15 தீர்த்தக் கிணறு, 24 உட்கோயில்கள், 365 சிவலிங்கம், 86 விநாயகர் சன்னதிகள் உள்ளன.

• இங்குள்ள கமலாலய குளம் 30 ஏக்கர் பரப்பு கொண்டது.

நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி

• 2000 ஆண்டு பழமை மிக்க இக்கோயில் 14 ஏக்கர் பரப்பு கொண்டது.

• தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.

• நடராஜரின் ஐந்து சபைகளில் தாமிர சபை இங்குள்ளது.

• கருவறையில் சிவனுடன் பள்ளி கொண்ட பெருமாளும் காட்சியளிக்கிறார்.